31st August 2023 20:41:59 Hours
கொட்டிகாவத்தை லயன்ஸ் கழகத் தலைவர் திரு நிஹால் தர்மசிறி, அவரது துணைவியர் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கிய அனுசரனையில் 14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது காலாட் பிரிகேட் படையினர் முள்ளேரியாவ குறைந்த வருமானம் கொண்ட 35 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை (ஓகஸ்ட் 26) முன்னெடுத்தனர்.
படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டமானது மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடி பீஎஸ்சீ அவர்கள் மற்றும் 14 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, ஆகியோரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், 144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்வீ கொடித்துவக்கு அவர்கள் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியுடன் இணைந்து இத்திட்டத்தை மேற்பார்வையிட்டார்.
144 வது காலாட் பிரிகேட் சிவில் அலுவல்கள் அதிகாரி, 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் முல்லேரியா சமுர்த்தி பிரிவின் தலைவர் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.