25th November 2022 19:13:52 Hours
சிவில் மற்றும் இராணுவ உறவுகள் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் பிரதான நோக்கத்துடன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவு படையினர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கோப்பாய் சிமிக் பூங்காவில் யாழ்ப்பாண சிவில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையே கிரிக்கெட் மற்றும் புட்சல் போட்டிகளை 51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இறுதி போட்டியில் பிரதம அதிதியாக 51 வது காலாட் படைபிரிவின் தளபதி பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்து கொண்டார். போட்டியின் போது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பு அணிகளை உற்சாகப்படுத்தினர்.
போட்டியின் இறுதியில், தளபதி கூட்டத்தில் உரையாற்றியதுடன், அடுத்த போட்டியை பெரிய அளவில் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். பங்குபற்றிய அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.