Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd January 2025 14:10:42 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 28 டிசம்பர் 2024 அன்று இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் இராணுவத்தினர் மற்றும் இயந்திரவியல் காலாட் படையணி சிவில் ஊழியர்களின் 105 பாடசாலை பிள்ளைகளுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலாந்தி வனசிங்க அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியால் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் பிள்ளைக்கு சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன. இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் டிசம்பர் மாதக் கூட்டத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இந் நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் உறுப்பினர்கள் மற்றும் பிள்ளைகள் பங்கேற்றனர்.