19th August 2023 20:47:04 Hours
பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இயந்திரவியல் காலாட் படையணியின் புதிய படைத்தளபதியாக செவ்வாய்க்கிழமை (15) தம்புள்ள அல்மில்லேவவில் உள்ள இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் சமய ஆசீர்வாத நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய படைத்தளபதியினை இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் ஏ.எம்.ஏ. அபேசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அன்புடன் வரவேற்றார். அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து புதிய படைத்தளபதி இயந்திரவியல் காலாட் படையணி வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னர் மங்கள விளக்கேற்றினார்.
அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், அவர் அதிகாரிகளிடம் உரையாடுவதற்கு முன் குழு படம் எடுக்க அழைக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் இயந்திரவியல் காலாட் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.