12th March 2021 17:00:13 Hours
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் புனீத் சுஷில் வியாழக்கிழமை (11) வடக்கு மாகாணத்திற்கான தனது விஜயத்தின் போது கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களை சந்தித்தார்.
இதன்போது கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகரை வரவேற்று, இராணுவத்தின் வகிபாகம், சிவில்-இராணுவ உறவுகள், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், சமூக நலத் திட்டங்கள் போன்ற விடயங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.
அதனையடதுத்து கிளிநொச்சி தளபதி சார்பில் கிளிநொச்சி படை பதவி நிலை அதிகாரி – 01 லெப்டினன்ட் கேணல் சந்தன ஜயமஹா அவர்களினால் கிளிநொச்சிக்குள் உள்ளடங்கும் பகுதிகள் பற்றிய விளக்கமொன்றினை முன்வைத்தார்.
இதன்போது நிர்வாக மற்றும் விடுதிகள் தொடர்பிலான பிரிகேடியர் தீபால் ஹத்துருசிங்க உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டதுடன், நினைவுச் சின்னங்களை பரிமாற்றத்துடன் இந்நிகழ்வு நிறைவுக்கு வந்தது. Best Sneakers | Nike News