Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2021 06:44:30 Hours

இடை நிலைப் பராமரிப்பு நிலையத்தில் உள்ளவர்களுக்கு ஒரு சமூக ஆர்வலர் இரவு உணவு வழங்கல்

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் எல்பிட்டிய , குருந்துகஹா ஹெடிக்ம பகுதியின் ஒரு சமூக ஆர்வலர் ஞாயிற்றுக்கிழமை (29) இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் ருஹுனு பல்கலைக்கழக வளாக இடை நிலைப் பராமரிப்பு நிலையத்தில் உள்ளவர்களுக்கு இரவு உணவு வழங்கினார்.

திரு சுப்புன் வீரசிங்க 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகேவின் ஒருங்கிணைப்புடன் இந்த இடை நிலைப் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெறும் 200 பேர் மற்றும் ஊழியர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு அவர்களால் இந்த திட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.