Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2023 08:40:20 Hours

அராலி முனையில் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் அவரது சாகக்கள் நினைவுகூரல்

செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 8) ஊர்காவற்துறை அராலி முனை நினைவுச்சின்னம் நாட்டின் தலைசிறந்த இராணுவத் தலைவர்களில் ஒருவரான லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் பல இராணுவப் போர்வீரர்கள் 1992 ஆகஸ்ட் 8 அன்று அராலி முனையில் எல்ரீரீஈ யின் கண்னி வெடி தாக்குதலில் உயிர்நீத்தமை நினைவு கூரப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் நினைவுத்தூபியில் 31 வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டதுடன் இந் நிகழ்வு 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் டப்ளியூ பீ வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியு அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. அன்றைய தினத்தின் பிரதம அதிதியான யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்கள் வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

யாழ். அராலி முனையில் எல்ரீரீஈ இன் கண்ணிவெடியில் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன் கேணல் எச்ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜிஎச் ஆரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பலிபான, கொமான்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன் கொமான்டர் சீபி விஜேபுர, மற்றும் சிப்பாய் டபிள்யூஜே விக்கிரமசிங்க ஆகியோர் உயிரை தியாகம் செய்தனர்.

வடக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி, யாழ். பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் ஒருங்கிணைப்பு (தொண்டர்), பிரிகேட் தளபதிகள், இலங்கை கடற்படையின் பிரதித் தளபதிகள், சிரேஷ்ட முப்படைத் அதிகாரிகள் மற்றும் படையினர் நிகழ்வில் பங்குபற்றினர்.