16th November 2021 10:30:15 Hours
அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான 'தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை மேம்பாட்டு பாடநெறி இல. 36', இலங்கை இராணுவ பயிற்சி கட்டளைகளின் 'வழிமுறை பாடநெறி எண் 53', போன்றவை கடந்த வியாழக்கிழமை (11) அம்பாறை போர் பயிற்சிப் கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்டன.
இப் பாடநெறிகள் இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் திறமையை மேம்படுத்துவதையும், பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்த நடைமுறை அறிவை பெற்றுகொள்வதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப் பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் அம்பாறை போர் பயிற்சி கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் கல்பா சஞ்சீவ அவர்கள் தொடக்க உரையை நிகழ்த்தினார்.