Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2021 13:01:05 Hours

அபாயகர ஔடதங்கள் தொடர்பான விரிவுரை

புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மார்ச் 26-30 திகதி வரை நடத்தப்பட்டது.

இவ் விரிவுரை தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபை பயிற்றிவிப்பாளரான திரு ஷாமர பிரதீப் கருணாரத்ன மற்றும் செல்வி ஜே.ஏ. இரேஷா செவ்வந்தி அவர்களால் விரிவுரைகள் நடத்தப்பட்டன.

விரிவுரைகள் மிஹிந்து செத் மெதுர, சுவசாஹான மையம், கஜபா படைத் தலைமையகம் மற்றும் விஜயபாகு காலாட்படை படைப்பிரிவு தலைமையகம் ஆகியவற்றில் நடத்தப்பட்டன.

இந்த திட்டத்தின் ஊடாக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு போதை மற்றும் மதுசாரம் பற்றிய முழுமையான அறிவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மிஹிந்து செத் மெதுரவின் தளபதி கர்ணல் ஜீவன் குணதிலகே , சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர். latest jordans | Nike SB