16th May 2020 23:50:29 Hours
அன்செல் குளோபல் பொறியியல் பிரிவின் அன்செல் லங்கா தனியார் நிறுவனத்தினர் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து கோவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் படையினர்கள் பயன்படுத்த கூடிய 300 பாதுகாப்பு உபகரண சீருடைகளை நன்கொடையாக வழங்கினர்.
இந்த சந்திப்பில் அன்செல் குளோபல் பொறியியல் பிரிவின் அன்செல் லங்கா தனியார் நிறுவனத்தின் பனிப்பாளர் திரு உதய டி சில்வா, சிரேஷ்ட முகாமையாளர் திரு.தயான் குனவர்தன, பொறியாளர்களான திரு. டி.ஜி. ஹேமசிறி, திரு சாமிந்து, திரு கசுன் விஜேசிங்க மற்றும் திருமதி வினூதி கமகே ஆகியோர் இராணுவத் தளபதியுடனான உரையாடலின் போது கலந்து கொண்டனர். இதே நிறுவனம் இதற்கு முன்பு இதேபோன்ற அன்பளிப்பினை வழங்கியது.
அன்செல் லங்கா தனியார் நிறுவனமானது, பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் வடிவமைப்புகளில் உலகளாவிய ரீதியில் தலைசிறந்து விளங்குவதுடன் தொழில்துறை தொழிலாளர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் நோயாளர்களின் கை மற்றும் உடற் பாகங்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு உகந்த பாதுகாப்பையும் சிறந்த ஆறுதலையும் வழங்குவதற்காக பாதுகாப்பு உபகரண உற்பத்திகளை செய்கிறது என்பது குறிப்பிடதக்க விடயமாகும. latest Running Sneakers | Sneakers