18th August 2024 06:48:57 Hours
அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பாடநெறி இல. 23 கம்பளையில் உள்ள இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மையத்தில் 14 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவடைந்தது.
இந்த பயிற்சி பாடநெறியானது 08 ஜூலை 2024 முதல் 14 ஆகஸ்ட் 2024 வரை 06 அதிகாரிகள் மற்றும் 197 சிப்பாய்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் இராண்டாம் லெப்டினன் ஜேஎல்பீ இருந்திக அவர்களுக்கு தகுதி வரிசையில் முதலிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவுரையினை இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மைய தளபதி கேணல் ஆர்எம்எச்பீகே ரத்நாயக்க அவர்கள் ஆற்றினார்.