14th October 2022 19:00:52 Hours
வெள்ளிக்கிழமை (14) மாலை அங்குருவெல்ல, தும்பலியத்த, வரக்காபொல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 04 பேர் உயிருடன் வீட்டில் புதையுண்டதையடுத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேடின் 8 இலங்கை சிங்கப் படையணி படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாலை வேளையில் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் (தந்தை) மண் மேடுகளை அகற்றி மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் உறுதி செய்தன. இத் தோடுதல் நடவடிக்கைகளை அதிகாரிகள் உட்பட 75 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஏனையவர்களை மீட்கும் பொருட்டு மண்னை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனதுடன் தொடர் நடவடிக்கைகளுக்கு பெரும்மழை பெரும் சவாலாகவே உள்ளது.
மீட்கப்பட்ட குடும்பத்தின் தந்தை வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, 61 வது படைப்பிரிவின் தளபதி, 611 வது பிரிகேட் தளபதி மற்றும் குறித்த கட்டளை அதிகாரியுடன் இணைந்து இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.