10th May 2017 16:10:54 Hours
இந்த சான்றிதழ்களுக்கு மேலாக பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு படைவீரர்களின் தியாகத்தின் நிமித்தம் 301 முழுமையாக்கப்பட்ட வீடுகளும்இ 62 புதிதான வீடுகள், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசுகளும் இந்த நிகழ்வின்;போது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்இ பாதுகாப்பு செயலாளர்இ ரணவிருசேவை அதிகார சபையின் தலைவி, முப்படைதளபதிகள், உட்பட சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளரினால் வரவேற்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் சம்பிரதாய முறைப்படி மங்களவிளக்கேற்றலும், தேசியகீதம் இசைத்தலும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களினை நினைவூபடுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலியூம் அதனை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளரின் வரவேற்பு உறையூம் இடம்பெற்றது.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் பாதுகாப்புபடை வீரர்களின் சேவைகளை கௌரவித்து பாராட்டினை தெரிவித்து நாட்டில் நல்லிணக்கத்தை மேண்படுத்துவதற்காக சமாதானத்துடன் செயற்படுவோம் எனும் செய்தியை தெரிவித்து சான்றிதழ்களை இந்த நிகழ்வின் போது வழங்கினார்.
இந்த நிகழ்வின் இறுதி அம்சமாக பாதுகாப்பு அமைச்சினால், பாதுகாப்பு படைவீரர்களுக்கான வரப்பிரசாத சிறப்பு திட்டத்தினை கௌரவித்து அங்கவீனமுற்ற படைவீரரினால் நன்றியூறை வழங்கப்பட்டது.
Asics shoes | Nike News