08th April 2023 20:45:02 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் 241 வது காலாட் பிரிகேடின் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சுற்றியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை எழுதுபொருட்களை அக்கரைப்பற்று விஜேராம விகாரையில் புதன்கிழமை (ஏப்ரல் 05) ஒருங்கிணைத்து வழங்கினர்.
24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் 241 வது பிரிகேட் தளபதியின் ஆசிர்வாதத்துடன் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மற்றும் படையினரின் ஒருங்கிணைப்பு மற்றும் அகில இலங்கை தொழில்சார் புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கத்தின் அனுசரணையின் ஊடாக இத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி மற்றும் 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் தணிக பத்திரத்ன ஆகியோர் இந்த திட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து அறிவுறுத்தல்களை வழங்கினர்.
இந்நிகழ்வின் போது குடும்பங்களுக்கு தலா ரூ. 7,000/= பெறுமதியான 34 உலர் உணவுப் பொதிகள் மற்றும் தலா ரூ. 2,600./= பெறுமதியான 30 பாடசாலை உபகரண பொதிகளும் கலந்துகொண்ட அனைவருக்கும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் 11 வது தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் புபுது ஹெட்டியாராச்சி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.