Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2024 11:48:56 Hours

2 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் கிளிநொச்சி மாணவர்களுக்கு காலணிகள்

கிளிநொச்சி ஜயபுரம் கலவன் பாடசாலையில் 2024 ஜனவரி 20 ம் திகதியன்று 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் நன்கொடை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 552 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎஸ்எஸ் ரதல்லகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி ஜயபுரம் கலவன் பாடசாலையின் 60 மாணவர்களுக்கும் 55 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் / சிவில் ஊழியர்களின் 40 பிள்ளைகளுக்கும் ஜோடி காலணிகள் வழங்கப்பட்டன. பின்லாந்தைச் சேர்ந்த அனுசரனையாளரான திருமதி.மிரின்ஜா கோன்டியா அவர்களின் உதவியின் மூலம் இந்த நன்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் 552 வது காலாட் பிரிகேட் தளபதி, 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.