06th February 2024 15:30:01 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விரிவுரை மண்டபம், தொலைக்காட்சி அறை மற்றும் ஓய்வு அறை என்பன உத்தியோகபூர்வமாக 2024 பெப்ரவரி 04 அன்று திறந்து வைக்கப்பட்டன.
22 வது காலாட் படைப்பிரிவில் வசதிகள் மேம்படுத்துதல் மற்றும் சுதந்திர தினம் கொண்டாட்டம் மேலும், 22 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளையின் கீழ் பணியாற்றும் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 76 வது சுதந்திர தின விழாவில் பங்குப்பற்றிய சேருவில மங்கல ராஜமஹா விஹாரையின் 265 அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு திரு விஜித விஜேசேகர மற்றும் திருமதி இந்து முதலிகே ஆகியோரின் அனுசரனையில் மதிய உணவு வழங்கப்பட்டது.