05th February 2024 19:40:50 Hours
புதிதாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 55 வது காலாட் படைப்பிரிவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களை திங்கட்கிழமை (ஜனவரி 29) அன்று மாவட்ட செயலகத்தில் சந்தித்தார்.
சந்திப்பின் போது, யாழ் குடாநாட்டில், சிவில் இராணுவ உறவுகளின் நீண்டகால பிணைப்பை வலுப்படுத்தும், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுக்கு மிக உயர்ந்த பரிசீலனை மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்தல் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், சிவில் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக அரச அதிகாரிகளை நேரில் சென்று பார்வையிட்ட யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதிக்கு மாவட்ட செயலாளர் பாராட்டு தெரிவித்தார்.
இறுதியில், மாவட்டச் செயலாளருக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இந்த கலந்துரையாடலின் போது 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.