05th February 2024 14:27:54 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 ஏ.கே. ராமநாதன் (ஓய்வு) அவர்களுக்கு இறுதி இராணுவ மரியாதை வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) பிற்பகல் யாழ். ஆவரங்கல் பொது மயானத்தில் இந்து மத சம்பிரதாயங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.
அதிகாரவாணையற்ற அதிகாரி 1 ஏ.கே ராமநாதன் (ஓய்வு) அவர்கள் 1938 ஓகஸ்ட் 29 ஆம் திகதி பிறந்தார். யாழ். புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரியில் கல்வியைப் பெற்றார். 1958 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்து கொண்ட இந்த சிரேஷ்ட வீரர், இலங்கையின் பெருமைமிக்க பிரஜையாக நாட்டிற்கு சேவையாற்றியதோடு, அக்காலப்பகுதியில் தனது அர்ப்பணிப்பு மற்றும் விஸ்வாசத்திற்காக இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் சிறந்த பாராட்டுக்களைப் பெற்றவர்.
அவர் ஓய்வு பெறுவதற்கு முன் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் நான்காவது படையணி சாஜென் மேஜராக நியமிக்கப்பட்டிருந்தார். பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசத்திலுள்ள தமிழ் சிவில் சமூக உறுப்பினர்களும் அதிகாவாணையற்ற அதிகாரிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு வருகை தந்திருந்தனர்.