Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2024 14:25:44 Hours

புதிய யாழ். தளபதி 51 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் கோப்பாய் 51 வது காலாட் படைப்பிரிவுக்கும் அதன் கீழ் உள்ள பிரிகேட் மற்றும் படையலகுகளுக்கும் 31 ஜனவரி 2024 முதல் 2024 பெப்ரவரி 01 வரை தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

பிரிவு தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில், வருகை தந்த தளபதிக்கு 14 வது கஜபா படையணி படையினரால் இராணுவ மரபுகளுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. வருகை தந்த 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி அவர்களை மரியாதையுடன் வரவேற்று படையினருக்கு உரையாற்ற உள்ளக விளையாட்டரங்கிற்கு அழைத்துச் செள்ளக்கட்டார்.

இதன் போது உரையாற்றிய யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி தனது தலைமையின் கீழ் உள்ள படையினர்களின் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். படைப்பிரிவிற்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில், முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்த அவர், படைப்பிரிவு தலைமையகத்திற்கு முன்பாக குழுப் படம் எடுத்துகொண்டார். பின்னர், அவர் படையினரை நிலைநிறுத்தல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவு தொடர்பான முக்கிய அம்சங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி 511, 513 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளைப் படையலகுகளுக்கும் காங்கேசன்துறை கண்ணிவெடியகற்றும் பகுதிக்கும் விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தில் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.