Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2024 16:04:15 Hours

61 வது காலாட் படைப்பிரிவினால் இரத்தினபுரி வசதியற்ற பிள்ளைகளுக்கு ஆதரவு

8 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2024 ஜனவரி 30 அன்று இரத்தினபுரியில் 127 ஏழை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை பட்டதொட்ட ஆனந்த சைத்திய விஹாரயில் முன்னெடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் 61 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அந்தந்த பகுதி கிராம சேவை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், இந்நிகழ்வுக்கு சியெட் குழுமம் நிதி உதவிகளை வழங்கியது. நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 611 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், சியட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ரவி தத்லானி மற்றும் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.