01st February 2024 19:03:24 Hours
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் காலி முகத்திடலில் இடம்பெற்ற 76வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் பரசூட் பாய்ச்சலின் போது காயமடைந்த இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களின் நிலை குறித்து நேரில் கேட்டறிவதற்காக கொழும்பு இராணுவ வைத்தியசாலை மற்றும் தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
ஒத்திகையின் போது எதிர்பாராத விபத்தை எதிர்கொண்ட காயமடைந்த பரசூட் வீரர்களை இராஜாங்க அமைச்சர் நேரில் சந்தித்து அவர்களின் நலம் விசாரித்துடன் விரைவில் குணமடைய தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் முன், காயமடைந்த பரசூட் வீரர்களின் தற்போதைய சிகிச்சை மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை ஊழியர்களுடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.