01st February 2024 19:12:34 Hours
ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 04) நடைபெறவுள்ள நாட்டின் 76வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் அணிவகுப்பு ஒத்திகையை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இன்று (பெப். 01) ஆய்வு செய்தார்.
ஒத்திகையின் போது, இராணுவத் தளபதி நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுடன் அணிவகுப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்து அங்கிருந்த சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இவ் கலந்துரையாடலில் பரசூட்வீர்ர்கள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் அவர்களின் பாதுகாப்பையும் அவர்களின் வான்வழி சாகசங்களின் வெற்றியையும் உறுதிப்படுத்த தளபதி அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதே நேரத்தில், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் சுதந்திர அணிவகுப்பை மேற்பார்வையிடும் நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களும் பங்குபற்றினார். இந்த ஆய்வு படையினரின் கூட்டு பங்கேற்பை மதிப்பிடுவதும் நிகழ்வின் ஒட்டுமொத்த வெற்றிக்கு சகோதர சேவைகளின் பங்களிப்பை மதிப்பிடுவதாகும்.