Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2024 19:16:57 Hours

போர் பயிற்சி பாடசாலையில் நட்புரீதியிலான மென்பந்து கிரிகட் போட்டி

அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையின் பாடநெறி பங்கேற்பாளர்களுக்கிடையில் ஜனவரி 27 ஆம் திகதி போர் பயிற்சி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் தோழமை மென்பந்து கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இதன்படி, 8 அணிகள் போட்டியில் பங்குபற்றியதுடன், போர் பயிற்சி பாடசாலையின் நிரந்தர பணியாளர் அணி சம்பியன்ஷிப்பை வென்றதுடன், தலைமைத்துவ மற்றும் தொழில் அபிவிருத்தி பாடநெறி மாணவர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டீஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யீஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கினார்.