29th January 2024 15:05:12 Hours
8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தனது 31 வது ஆண்டு நிறைவை ஒரு வார கால கொண்டாட்டத்துடன் 2024 ஜனவரி 16 முதல் 22 வரை அஹுகம்மான படையலகு தலைமையகத்தில் கொண்டாடியது. 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் வைடிஎன் டி சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆண்டு நிறைவு நாளில், 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இந்த வார விழாக்களில் இரவு முழுவதும் பிரித் பாராயணம், வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி, மரக்கன்றுகள் நடுதல், படை வீரர்களுக்கான உரை, அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு, படையலகு குழுக்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் படையலகு வளாகத்தில் நடைபெற்றன.