Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2024 15:06:12 Hours

12 வது இராணுவ சமிக்ஞை படையணியின் 7 வது ஆண்டு நிறைவு விழா

12 வது இராணுவ சமிக்ஞை படையணி தனது 7 வது ஆண்டு நிறைவு விழாவை 25 ஜனவரி 2024 அன்று பனாகொடை படையணி வளாகத்தில் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது. 12 வது இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி கேணல் டபிள்யூஆர்எம்ஆர் விக்ரமசிங்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

ஆண்டு நிறைவு நாளில் கட்டளை அதிகாரிக்கு படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கினர். இந்நாளின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இராணுவ சமிக்ஞை படையணி படையினர் நாட்டிற்கு ஆற்றிய தியாகங்களை நினைவுகூரும் வகையில் இராணுவ சமிக்ஞை படையணி போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு கட்டளை அதிகாரி மலரஞ்சலி செலுத்தினார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு மேலாக படையினர் படையணியின் எதிர்கால முயற்சிகளுக்கு ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக போதி பூஜையையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் விளையாட்டுத் திறமையை சேர்க்கும் வகையில், இராணுவ வீரர்கள் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியை நடாத்தியதுடன், அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் ஆண்டு விழா நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.