29th January 2024 15:17:50 Hours
2023 க.பொ.த (சா/த) மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 36 மாணவர்களுக்கு 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி ஜனவரி 27 அன்று மன்னார் ஶ்ரீநாதகுளத்தில் உள்ள 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களான திரு.விமுக்தி விஜேசிங்க, திரு.திசர தென்னகோன், மற்றும் திரு.அசேல விஜேகோன் ஆகியோரின் நிதியுதவியில் இந்த திட்டம் சாத்தியமானது. அனுசரனையாளர்களின் ஆதரவில் பரிசுப் பொதிகளில் ஒரு ஜோடி காலணி, பாடசாலை பை, பயிற்சி புத்தகங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பாடசாலை எழுதுபொருட்கள் அடங்கியிருந்தன.
இந் நிகழ்வில் 541 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், மடு கல்வி வலய அலுவலக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.