26th January 2024 15:01:12 Hours
இலங்கையில் 1987-1990 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த இந்திய அமைதி காக்கும் படையின் வீரர்களின் நினைவேந்தல் மற்றும் அவர்களின் தியாகங்கள் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவு தூபியில் நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தல் 2024 ஜனவரி 26 அன்று இந்திய குடியரசு தின கொண்டாட்டத்திற்கு இணையாக நடைபெற்றது. யாழ். இலங்கைக்கான இந்திய துணைத் தூதரக அலுவலகத்துடன் இணைந்து யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ். இலங்கைக்கான இந்தியத் தூதரகத் தூதுவர் திரு ராகேஷ் நட்ராஜ் மற்றும் யாழ் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் இந்திய அமைதிப் காக்கும் படை நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கைக்கான இந்தியத் தூதரக அலுவலக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.