Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2024 18:32:57 Hours

புதிய யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 31 வது தளபதியாக 2024 ஜனவரி 24 அன்று மதச் சடங்குகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.

1 வது இயந்திரவியற் காலாட் படையணியின் படையினரின் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் சர்வமத குருமார்களின் முன்னிலையில் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பலாலி போர் வீரர் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன் அந் நாளின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன் சில படங்களையும் எடுத்துக்கொண்டார்.

மேலும், அன்றைய நிகழ்வின் உச்சக்கட்டமாக அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தினை தொடர்ந்து அவர் படையினருக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.