Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2024 20:09:35 Hours

இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியின் 3வது ஆண்டு நிறைவு விழா

காலாட் படை பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.பீ.எஸ்.எ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ், இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி தனது 3 வது ஆண்டு நிறைவை கரந்தெனிய இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி தலைமையகத்தில் பல நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கும் சேவையில் உள்ள படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 02) இரவு முழுவதும் பிரித் பாராயணமும், அடுத்தநாள் (ஜனவரி 03) காலை தானம் வழங்கல் இடம் பெற்றது.

ஆண்டு நிறைவு நாளில் (ஜனவரி 04), படையினரால் அன்றைய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் கே.பீ.எஸ்.எ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் படையணி சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரம் மற்றும் படையினருக்கான உரை என்பனவும் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷெஹானி பெர்னாண்டோ, இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.