Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2024 20:20:20 Hours

யாழ். பாதுகாப்பு படையினரால் வெளிச்செல்லும் யாழ். தளபதிக்கு கௌரவிப்பு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 35 வருடங்களுக்கும் மேலான புகழ்பெற்ற சேவையை நிறைவு செய்து இராணுவ நிரந்தர படையணியில் இருந்து 13 ஜனவரி 2024 அன்று ஓய்வு பெற்றார். யாழில் இருந்து புறப்படும் முன்னர், வெளியேறும் தளபதி 51, 52 மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு படையினருக்கு உரையாற்றினார். யாழ். குடாநாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தமைக்கும் உயர் தர நிபுணத்துவத்தை வழங்கியமைக்காகவும் அனைத்து நிலையினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி இராணுவ மரபுகளுக்கு இணங்க, 3 வது இலங்கை சமிக்ஞைப் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர் ஒரு சம்பிரதாயமாக உத்தியோகபூர்வ கையளிப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

பின்னர், வெளிச்செல்லும் தளபதி படையினருக்கு உரையாற்றுவதற்கு முன் குழு படம் எடுப்பதற்காக அழைக்கப்பட்டார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.