14th January 2024 18:06:34 Hours
ஆனந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, 68 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெள்ளிக்கிழமை (ஜன. 12) ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் மேசைகள் மற்றும் கதிரைகளை வழங்கினர்.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் நன்கொடை முயற்சியின் கீழ் படையினர் உள்நாட்டு பொருட்களைப் பயன்படுத்தி தளபாடங்களை உருவாக்கினர்.
இந்த நிகழ்வின் போது 681 வது காலாட் பிரிகேட் தளபதி,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.