Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2024 17:40:09 Hours

5 வது இலங்கை சமிக்ஞை படையணியின் 30 வது ஆண்டு நிறைவு

5 வது இலங்கை சமிக்ஞை படையணி தனது 30வது ஆண்டு நிறைவை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 02 ) 5 வது இராணுவ சமிக்ஞை படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் பாதுக்க படையணி வளாகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

நிகழ்வுகள் போதி பூஜையுடன் ஆரம்பமாகியதுடன், தொடர்ந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆண்டுவிழா நாளில், கட்டளை அதிகாரியை கௌரவிக்கும் வகையில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அனைத்து நிலையினருடனான ஒன்றுகூடல் மற்றும் சிப்பாய்களின் உணவகத்தில் மதிய உணவுடன் நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்தன. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.