Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2024 17:00:09 Hours

22 வது படைப்பிரிவு படையினரால் ஹனுமான் கோவில் பக்தர்களுக்கு கொத்தமல்லி பானம்

திருகோணமலை ஹனுமான் கோவிலில் வியாழக்கிழமை (ஜனவரி 11) இடம்பெற்ற வருடாந்த பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு 22 வது காலாட் படைப்பிரிவு படையினர், கிராம மக்களுடன் இணைந்து கொத்தமல்லி பானம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

தலைமை அர்ச்சகரின் அழைப்பின் பேரில், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து பூஜையில் கலந்து கொண்டார்.