14th January 2024 18:03:29 Hours
நாவற்குழி சமித்திசுமண விகாரையில் புதிய சந்நிதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (ஜனவரி 13) இடம் பெற்றது. இந் நிகழ்வில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே. ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் இத் திட்டத்திற்கான முன்முயற்சி எடுக்கப்பட்டதுடன், 523 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 11 வது இராணுவ பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 11 வது இராணுவ பொறியியல் படையணி படையினர் கட்டுமான பணியை மேற்கொள்வர்.
அம்பாறை மாவட்டத்தின் கௌரவ பிரதம நீதியரசர் திருமதி நுஷாககுமாரி தர்மகீர்த்தி அவர்கள் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்குவார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.