Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th January 2024 19:24:48 Hours

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி பதவியேற்பு

விஜயபாகு காலாட்படை படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ஜனவரி 10 அன்று தியத்தலாவ மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.

புதிய தளபதிக்கு பிரதான நுழைவாயிலில் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அன்றைய நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, 7 வது இலங்கை சமிக்ஞை படையணி படையினரால் வழங்கப்பட்ட கௌரவ அணிவகுப்பு மரியாதையினை பரிசீலிப்பதற்கு அவர் அழைக்கப்பட்டார்.

பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படை தலைமையக புதிய தளபதி மகா சங்க உறுப்பினர்களின் ‘செத்பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

அதன்பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு படையினருக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.