13th January 2024 19:21:20 Hours
மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்ட போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2024 ஜனவரி 12 அன்று அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் கௌரவிக்கப்பட்டார்.
இராணுவ மரபுகளின்படி இலங்கை சிங்க படையணி பிரதி நிலைய தளபதி பிரதம அதிதியை வரவேற்று பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை பரிசீலனை செய்ய அழைத்தார். அதன்பிறகு, இலங்கை சிங்க படையணி நிலைய தளபதி அவர்களுடன் அணிவகுப்பு மரியாதையினை பெற்றுக்கொண்டார். சிறிது நேரம் கழித்து, அந் நாளைக் குறிக்கும் வகையில் ஒரு மரக்கன்று நடுவதற்கு அவர் அழைக்கப்பட்டார்.
தாய் நாட்டிற்காக உயிர் தியாகத்தை செய்த இலங்கை சிங்க படையணியின் வீரம் மிக்க அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை கௌரவிக்கும் வகையில் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அனைத்து நிலையினருடான தேநீர் விருந்துபசாரத்தில் அவர் கலந்து கொண்டதுடன் அங்கு அவர் கலந்துகொண்டவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேஜர் ஜெனரல் நிலை உயர்வினைபெற்றமைக்கு மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் சிங்க படையணி படை தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் பாராட்டு நினைவுசின்னத்தினை வழங்கினார்.