12th January 2024 17:25:15 Hours
தொடர் மழை காரணமாக தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் விழுந்த மண் மேடுகள் மற்றும் பாறைகளை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் புதன்கிழமை (ஜனவரி 10) மாலை அகற்றினர்.
இதனால் கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் மலையக புகையிரத பாதை தடைபட்டதுடன், தியத்தலாவ புகையிரத நிலைய அதிகாரிகளின் உதவியுடன் படையினர் தடைகளை நீக்கி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்க வசதி செய்தனர்.