12th January 2024 17:18:30 Hours
இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ செயலாளராக கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இன்று (12) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவச் செயலாளர் மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
இந் நிகழ்வில் பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்த நியமனத்திற்கு முன்னர் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார்.