12th January 2024 17:21:36 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி இராணுவத்தில் பயன்படுத்தப்படும் பழுதடைந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்களை மறுசீரமைத்து அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, 2 வது இராணுவ போர் கருவி படையணி மற்றும் 2 வது பொறியியல் சேவைகள் படையணி படையினர்களின் கூட்டு முயற்சிகளுக்கு இத்திட்டத்தின் அமுலாக்கம் ஒப்படைக்கப்பட்டது. வட மத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி மற்றும் அப்பிரிவு கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் 20 சைக்கிள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 20 வாகனங்கள் (டிராக்டர்கள், இலகுரக வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அடங்கியது), 440 எல்ஈடி விளக்குகள், 25 எரிவாயு அடுப்புகள், 1000 பாலிஸ்டிக் ஹெல்மெட்டுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட அலுவலக நாற்காலிகள் புதுப்பிக்கப்பட்டு 05 ஜனவரி 2024 அன்று அந்தந்த பிரிவு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தற்போதைய திட்டத்தின் எல்லைக்கு அப்பால் 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் புதுமையான முறையில் தேங்காய் சிரட்டை அடுப்புகளை ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கைவிடப்பட்ட பீப்பாய்களில் இருந்து கண்டிக்கப்பட்ட எரிவாயு தொட்டிகளைப் பயன்படுத்தி உருவாக்கியது. இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த அடுப்புகள் எதிர்காலத்தில் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும்.