Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2024 17:19:30 Hours

பொறியியல் சேவைகள் படையணியின் 74 வது ஆண்டு நிறைவு விழா

பொறியியல் சேவைகள் படையணியின் 74 வது ஆண்டு நிறைவு விழா ஜனவரி 10 அன்று பனாகொட இராணுவ வளாக பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படைத்தளபதியும் இலங்கை இராணுவத்தின் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ லங்கா அமரபால ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டார்.

மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ லங்கா அமரபால ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களை சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர், படையணி தலைமையகத்தில் உள்ள போர்வீரர்களின் நினைவுத்தூபிக்கு படைத்தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார். அன்றைய பிரதம விருந்தினர் படையினருக்கு உரையாற்ற முன்னர் அணிவகுப்பு மரியாதை வழங்கி கெளரவிக்கப்பட்டார். அதனைதொடர்ந்து அந்நாளின் நினைவாக பிரதம அதிதி தலைமையக வாளகத்தில் மரக்கன்றினை நாட்டினார்.

இந் நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.