10th January 2024 19:20:12 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பிரிகேடியர் டீஏ பீரிஸ் பீடீஎஸ்சி அவர்கள் வடமத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதியின் புதிய தளபதியாக 08 ஜனவரி 2024 அன்று அனுராதபுரம் வடமத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதி தலைமையகத்தில் பதவியேற்றார்.
பிரிகேடியர் டீஏ பீரிஸ் பீடீஎஸ்சி அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.