11th January 2024 19:35:35 Hours
58 வது காலாட்படை பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 58 வது காலாட் படைப்பிரிவின் 15 வது ஆண்டு நிறைவு 2024 ஜனவரி 03 அன்று தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.
ஆண்டு நிறைவு நாளுக்கு முன்னதாக, 58 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 2023 டிசம்பர் 31 அன்று எழுவன்குளம் ‘நிர்மலா மாதா முதியோர் இல்லத்தில்’ முதியோர்களுக்கு சிறப்பு மதிய விருந்து வழங்கப்பட்டதுடன் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியும் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த நாள் மாலை (01) 58 வது காலாட் படைப்பிரிவு தலைமையக விகாரையில் ‘போதி பூஜை” நிகழ்வில் இராணுவம் மற்றும் அனைத்துப் படையினருக்கும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கு இடையில் 58 வது படைப்பிரிவினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட கிரிகெட்போட்டி, காற்பந்து மற்றும் கரப்பந்து போட்டிகளும் இடம்பெற்றன.
இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க ஆண்டு நிறைவு நாளில், 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு 1 வது கெமுனு ஹேவா படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
ஆண்டு தினத் நிகழ்வுகளில் படைப்பிரிவின் தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அனைவரும் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.