10th January 2024 19:25:10 Hours
5 வது கவச வாகன உளவுப் படையணி தனது 30வது ஆண்டு நிறைவை இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் சனிக்கிழமை (ஜனவரி 06) பாங்கொல்ல அயன்சைட் முகாமில் கொண்டாடியது. இந்நிகழ்வில் கட்டளை அதிகாரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்ட இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வுடன் கவச வாகன கண்காட்சியும் இடம்பெற்றது.