11th January 2024 19:39:54 Hours
கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பெய்த கடும் மழையின் காரணமாக நாச்சதுவ குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து போகொட பாலத்திற்கு அருகில் உள்ள வீதியில் 3 அடி வரை நீரில் மூழ்கியது.
இதற்கிணங்க, 213 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலுக்கமைய 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் பொதுமக்களுக்கு படகுகள் மூலம் வீதியைக் கடப்பதற்கான போக்குவரத்து ஆதரவை வழங்கினர்.