10th January 2024 18:58:59 Hours
பனாகொட இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எம்.கே.ஜி.பீ.எஸ்.கே அபேசிங்க அவர்களுக்கு முறையான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (05 ஜனவரி) நடைபெற்றது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் நுழைவாயிலில் இராணுவ மரபுகளுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், சிறப்பு மேடைக்கு அழைக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரி அணிவகுப்பு மைதானத்தில் மரியாதை அணிவகுப்பில் கௌரவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இலங்கை இராணுவ பொது சேவை படையணி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டார். பின்னர் படையினருக்கான உரையின் போது அவரின் எண்ணக்கருக்களால் உத்வேகத்தை ஏற்படுத்தினார்.