10th January 2024 19:33:20 Hours
கடற்படை பதவி நிலை பிரதானி ரியல் அட்மிரல் கேஜே குலரத்ண ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியு அவர்கள் ஓய்வு பெறுவதனை முன்னிட்டு இன்று மாலை (ஜனவரி 10) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்ததுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சுமூகமான சந்திப்பின் முடிவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கடற்படை பதவி நிலை பிரதானிக்கு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கி இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.