09th January 2024 18:46:11 Hours
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ.எம்.பீ.எம் விஜேசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் ஜனவரி 5 அன்று 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணிக்கு கள விஜயம் மேற்கொண்டார்.
14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியினால் வருகை தந்த தளபதி அன்புடன் வரவேற்கப்பட்டார். அதனை தொடர்ந்து 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி தளபதி அவர்களுக்கு களப் பயணத்தினை மேற்கொள்வதற்கு முன் படையலகின் வகிப்பங்கு மற்றும் பணிகளை பற்றி விரிவான விளக்கத்தினை அளித்தார்.
விரிவான விளக்கத்தினை தொடர்ந்து தளபதி ஏனை அதிகாரிகளுடன் குருகந்த மற்றும் கோகிலாய் விகாரைக்குச் சென்றார். இந்த விஜயத்தின் போது, அவர்கள் விகாரைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தேரர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.