08th January 2024 18:05:07 Hours
இராணுவ தலைமையகத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இன்று காலை (ஜனவரி 08) இராணுவ தலைமையகத்தில் கடமையினை பொறுப்பெற்றார்.
அவர் தற்போதைய மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு பின் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பல மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் அடையாளமாக கையொப்பமிட்டார்.
இப்பதவியினை வகிப்பதற்கு முன் அவர் மத்திய பாதுகாப்பு படை தலைமைகத்தின் தளபதியாக பதவிவகித்தார். இந்நிகழ்வில் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.