08th January 2024 17:58:19 Hours
பொல்பித்திகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வதுரஸ்ஸ, பொன்ஹிலாவ, கந்துபடகம, வீரகொல்ல, தெகடவல, கட்டுகம்பொல, மற்றும் மாஎலிய தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான எழுதுபொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றன முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் வெள்ளிக்கிழமை (29 டிசம்பர்) வழங்கப்பட்டன.
ஹேமாஸ் பவுண்டேஷன்ஸ் தனியார் நிறுவனம் மற்றும் அனுசரனையாளர் குழுவினரால் இந்நிகழ்ச்சிக்கு தேவையான அனுசரனை வழங்கப்பட்டதுடன், 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 143 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் திரு ரொஷான் மஹாநாம ஆகியோரும் இத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.