08th January 2024 17:47:56 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கேணல் ஆர்.டி லொகுதொடஹேவா யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் திருகோணமலை இராணுவ வழங்கல் பாடசாலையின் புதிய தளபதியாக சனிக்கிழமை (ஜனவரி 06) மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
இராணுவ வழங்கல் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.